கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி இயக்குனர் சிகரம் பாலச்சந்தரே அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் வளைத்துள்ளார்.
© Behindglitz.com