புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.
priya bhavani shankar
அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானர்.
அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். இவரின் நடிப்பில் யானை, திருச்சிற்றம்பம் என சமீபத்தில் 2 படங்கள் வெளியானது.
இதையும் படிங்க: முதல் படத்தில் ஆஹா ஓஹோ ஹிட்.! அடுத்தடுத்து காணாமல் போன இளம் சிட்டுகள்… நஸ்ரியா முதல் ஸ்ரீதிவ்யா வரை…
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற அவர் அங்கு அழகான இடங்களில் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
© Behindglitz.com