பாக்க்யலக்ஷ்மி சீரியலில் தற்போது பாக்கியா சமையல் விஷயத்தில் சொதப்ப ராதிகாவும் போலீஸ் ஸ்டேஷனில் நிற்க இன்றைய எபிசோடு சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ஆசிரமத்திற்கு சாப்பாடு வழங்க ஈஸ்வரி கேட்டரிங்கில் ஆர்டர் செய்ய அந்த உணவை சாப்பிட்டு விட்டு குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் என பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் ராதிகாவை போலீஸ் கைது செய்ய பாக்கியாவை மாட்டி விடுகிறார்.
பாக்கியாவையும் போலீஸ் கைது செய்கிறது. ராதிகாவும், பாக்கியாவும் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்துள்ளனர். பாக்கியா ராதிகாவிடம் அனைத்தையும் எடுத்து சொல்கிறார். ஆனால் ராதிகா எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. உங்கள நம்புனதுக்கு என்ன இந்த இடத்துல நிறுத்திடீங்க என்று சொல்கிறார். எனக்கு இருக்குற பிரச்சனையில் இதுவேறையா என்று நொந்து கொள்கிறார் ராதிகா.
எழில் அம்மாவின் நிலையை நினைத்து வேதனையடைகிறார். என்ன முயற்சி செய்தும் எந்த பயனும் இல்லை. எழில் அந்த ஆசிரமத்திற்கு சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க செல்கிறார். ஆனால் அங்கு எழிலை யாரும் பேச விடவே இல்லை. ஒருபக்கம் கோபிக்கு கால் செய்தால் அவர் எடுக்கவே இல்லை.
இந்த விஷயத்தில் கோபி சிக்க வாய்ப்பு இருக்கிறதா?? இல்லை இதிலும் தப்பித்து கொள்வாரா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்பொழுதிருந்தே ராதிகா பாக்கியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே பாக்கியாவை பற்றி கோபி மறைமுகமாகவே தவறாகவே சொல்லி கொண்டிருந்தார். இனி உண்மை தெரிந்தாலும் ராதிகா பாக்கியாவை நம்பப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்
Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
© Behindglitz.com